சென்னை:

தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து இன்று வங்கிகள் இரவு 8 மணி இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

வங்கிகளுக்கு 5 நாட்கட்ள தொடர் விடுமுறை என செய்திகள் பரவி வந்த நிலையில் நிலையில், சனிக்கிழமை (இன்று) வங்கிகள் இயங்கும் என  அகில இந்திய வங்கிகளின் அதிகாரிகள் கூட்டமைப்பு தெளிவுபடுத்தி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை (நாளை) மகாவீர் ஜெயந்தி, வெள்ளிக்கிழமை  பெரிய வெள்ளி பண்டிகையை ஒட்டி வங்கிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை (31) வங்கி வழக்கம் போல் செயல்படும் என்றும், அன்று இரவு 8 மணி வரை அனைத்து வங்கிளும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி ஞாயிறு என்பதால் விடுமுறை. ஏப்ரல் 2-ம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால் வங்கிகள் செயல்பட்டாலும் அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது.

இந்நிலையில் இன்று இரவு 8 மணிவரை அனைத்து வங்கிகளும் இயங்க ரிசர்வ் வங்கி உத்தர விட்டுள்ளது.

றை என்பதால் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை மேற்கொள்வது முடியாத காரியமாக இருந்தது.

மேலும் இதனால் பலவிதமான பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் சனிக்கிழமை (இன்று) வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக மாலையுடன் வங்கி பணிகள் முடிந்துவிடும்.

ஆனால், ஆன்லைன் பண பரிமாற்றம் முதல் அனைத்துவிதமான வங்கி சேவைகளும் இரவு 8 மணி வரை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இன்று இரவு எட்டு மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.