டில்லி:

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.


இது குறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என மும்பையில் நடந்த கூட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கம் உறுதி அளித்தது.

இதை மேலும் உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதை தொடர்ந்து வரும் 30, 31ம் தேதிகளில் நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.