திருச்சி,

மிழகத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடை விதிப்பதாக ஐகோர்ட்டு நீதிபதி வைத்திய நாதன் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும், சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, விசாரணையை 30ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேனர் வைக்க நீதிமன்றம் தடை பிறப்பித்ததற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே  சீமான் உள்பட பல அரசியல் தலைவர்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடினம் என்று கூறியுள்ள நிலையில்  தற்போது பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் கருத்து தெரிவித்துள்ளார்

இந்நிலையில், சர்ச்சை புகழ் தலைவியான தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை,

இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட் அவுட், பேனர் குறித்த நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்துவது கேள்விக்குறி தான் என்றும் இந்த உத்தரவை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது கடினம் என்றும் அவர் கூறினார்.