சென்னை:

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த வகையில் சென்னையில் நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால போட்டியை நிறுத்த வேண்டும் ஒரு பிரிவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், திட்டமிட்டப்படி போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஸ்டேடியத்தில் போடப்பட்டுள்ளது. மேலும், போட்டியை காண வரும் ரசிகர்கள் பதாகைகள், பேனர், போஸ்டர் போன்றவற்றை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் போட்டியின் போது காண்பித்து சர்ச்சை ஏற்படுவதை தடுக்கவே இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் கறுப்பு சட்டை அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.