லாஸ் ஏஞ்சலஸ்

பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

 

 

பிரபல கூடப்பந்து வீரரான கோப் பிரயண்ட் கடந்த  20 வருடங்களாகக் கூடைப்பந்து விளையாட்டில் பல சாதனைகள் புரிந்து வருகிறார்.  இவர் என் பி ஏ போட்டிகளில் ஐந்து முறை சாம்பியன் ப்ட்டத்டை பெற்றுள்ளார்.  அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளிலும் பல சாதனைகள் செய்து புகழ் பெற்றுள்ளார்.

மகளுடன் பிரயண்ட்

நேற்று  கோப் பிரயண்ட் தனது 13 வயது மகள் ஜியன்னா மற்றும் 7 பேருடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஹெலிகாப்டரில் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.  இந்த ஹெலிகாப்டர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து சுமார் 30 மைல் தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது.   இந்த விபத்து லாஸ் ஏஞ்சலஸ் நேரப்படி நேற்று காலை 10 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் கோப் பிரயண்ட், அவரது மகள் ஜியன்னா உள்ளிட்ட 9 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.   இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   கோப் பிரயண்ட் மரணம் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

பிரயண்ட் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஏராளமான உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  தமிழ்த் திரையுலகில் தனுஷ், அனிருத் உள்ளிட்ட அவரது ரசிகர்கள் அவருடைய மறைவுக்கு தங்கள் டிவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.