குஜராத்:
ந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது மற்றும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கான 3 புதிய தேர்வாளர்களை தேர்வு செய்வதற்கு கிரிக்கெட் ஆலோசனைக் குழு அமைப்பது, நடுவர்கள் குழு, தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால போட்டித் தொடர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.