மும்பை:
ங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் நடராஜன் உள்ளிட்ட மூன்று தமிழக வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாண்டு வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

சென்னையில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும், மற்றொரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இந்தநிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கிடைக்காத நடராஜனுக்கு டி-20 தொடரில் இடம் கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

இந்த அணியில் விராட்கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சாஹல், வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டிவாட்டியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப், ஸ்ருதல் தாகுர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.