டெல்லி: ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளது. இதற்காக இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி பல்வேறு போட்டிகளில் ஆடி வந்தது. பிரிஸ்பெனில் நடைபெற்ற  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான  கடைசி டெஸ்ட் போட்டியில் . இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. இதன் காரணமாக,  பார்டர் கவாஸ்கர் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இந்த அறிவிப்பை கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.