மும்பை:

யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்” என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள்  பிசிசிஐ தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்த , 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.

பாலிவுட் பட இயக்குனரான கரன்ஜோஹர் தனியார் தொலைக்ககாட்சி ஒன்றில் காபி வித் கரன் என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக்பான்ட்யா  மற்றும் லோகேஷ் ராகுல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 24 மணி நேரத்திற்குள் அவர்கள் இருவரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்து உள்ளது.

`காஃபி வித் கரன்’ என்ற  நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது, தங்களது சொந்த விஷயங்கள் குறித்தும் கருத்து கூறினர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பேச்சின்போது,  “கருப்பு ஆளுங்களான எங்களுக்கு பெண்களைப் பார்த்தால் ஒரு ஈர்ப்பு வரத் தான் செய்யும். நான் முதன் முதலாக எனது வெர்ஜினிட்டியை இழந்த பிறகு, அந்த சம்பவத்தை முதன் முதலாக எனது தாயிடம் தான் தெரிவித்தேன். என் அம்மாவிடம் சென்று, ‘நான் இன்று செக்ஸில் ஈடுபட்டேன்” என்று கூறியதாக தெரிவித்தார்.

அதுபோல  லோகேஷ் ராகுலும்,  என் ரூமிற்கு வெளியே வேறொரு வீரரின் அறைக்குச் சென்று பெண்ணுடன் இணைந்து செக்ஸில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று பதில் கூறினார்.

அதைத்தொடர்ந்து கரன் ஜோஹர் அவர்களிடம், ஒரே பெண்ணை இருவருக்கும் பிடித்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்க, “அந்த பெண்ணின் முடிவுக்கே விட்டுவிடுவோம்” என ராகுல் கூற, “இல்லை… இல்லை… யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்” என்று பாண்ட்யா பதில் கூறினார்.  இவர்களின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து பெண்கள் அமைப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பாண்ட்யா வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிசிசிஐ இருவரிடமும் விளக்கம் கேட்டுள்ளது.