டெல்லி:

ராம் பக்தி அல்லது ரஹீம் பக்தியாக  இருந்தாலும், ராஷ்டிர பக்தியை பலப்படுத்துவது கட்டாயமாகும் என்று  அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார்.

அயோத்தி விவகாரம் தொடர்பாக மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு யாருக்கும் கிடைத்த வெற்றி அல்லது இழப்பாக கருதப்படக்கூடாது. அமைதியும் நல்லிணக்கமும் மேலோங்கட்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அயோத்தி வழக்கில் இன்று உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு  பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி,  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர்  ராமஜென்ம பூமி  இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்  என்று தீர்ப்பு கூறியது. மேலும், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் ஒதுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

அயோத்தியின் தீர்ப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருத கூடாது , நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பு உணர்த்தி உஙளளமு

நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர்,  ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ எந்த பக்தியாக இருந்தாலும், ராஷ்டிர பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது என்று கூறினார்.

எந்தவொரு சர்ச்சையும் உரிய சட்டத்தின் செயல்பாட்டில் இணக்கமாக தீர்க்கப்பட முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இது நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்கு ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை இது தெளிவாக விளக்குகிறது என்று கூறினார்.

மேலும்,  பல தசாப்தங்களாக நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை நீதி மன்றங்கள் இணக்கமாக முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு கண்ணோட்டத்திற்கும் மாறுபட்ட பார்வைகளை வெளிப்படுத்த போதுமான நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு நீதித்துறை செயல்முறைகளில் மக்கள் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும்.  இன்றைய தீர்ப்பின் முடிவில் 130 கோடி இந்தியர்கள் பராமரிக்கும் அமைதியும் அமைதியும் அமைதியான சகவாழ்வுக்கான இந்தியாவின் உள்ளார்ந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

ஒற்றுமை மற்றும் ஒற்றுமையின் இந்த ஆவி நம் தேசத்தின் வளர்ச்சிப் பாதையை ஆற்றட்டும். ஒவ்வொரு இந்தியனும் அதிகாரம் பெறட்டும்.

இவ்வாறு மோடி தெரிவித்து உள்ளார்.

மத்தியஅமைச்சர்  ராஜ்நாத் சிங்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியஅமைச்சர் நிதின்கட்கரி

அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.