சேலம்:

சேலத்தில் இன்று புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேலம் மாவட்டத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: சுகாதாரத் துறை கொடுக்கும் புள்ளிவிவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனரே?

பதில்: அரசாங்க மருத்துவமனையில் இறப்பவர்களின் கணக்கு அரசுக்குத் தெரியும். தனியார் மருத்துவமனைகளிலிருந்து பெறப்படும் செய்தியையும் வைத்து அறிவிக்கப்படுகிறது. இறப்பு பற்றி மறைப்பது கிடையாது, அதை மறைக்கவும் முடியாது. வேறு எந்த மரணத்தினாலும் பிரச்சினை கிடையாது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இறந்தார்களென்றால் அனைவருக் கும் தெரிந்துவிடும். இதை மறைக்க முடியாது. இறப்பு ஏற்பட்டால் அங்கே யாரும் செல்வ தில்லையே. இதை மறைப்பதனால் அரசுக்கு எந்தவித நன்மையும் கிடையாது.

சுகாதாரத் துறை மூலமாக, நாள்தோறும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், குணமடைந்த வர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் உள்ளவர்களின் விவரங்களை தெளிவுபடுத்துகிறோம். இதில் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக நாங்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: பரிசோதனையை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: இதுவரை மொத்தம் 6,09,856 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்து உள்ளோம். இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனையை மேற்கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். அதுமட்டுமல்லாமல், நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மொத்த பாதிப்பு 36,841. இதில், நேற்றையதினம் எடுக்கப்பட்ட மாதிரிகள் 17,675. பரிசோதனை நிலையங்கள் 77 உள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,179, நேற்றைய தினம் மட்டும் குண மடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1008, நேற்று வரை குணமடைந்து வீடு திரும்பிய வர்களின் மொத்த எண்ணிக்கை 19,333. இந்த கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 326. ஏற்கனவே கேன்சர், சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய்  போன்ற பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் இறப்பு தான் அதிகமாக இருக்கிறது என்ற புள்ளிவிவரங்களை மருத்துவர்கள் அளிக்கின்றனர்.

கொரோனா தொற்றால், இந்தியாவில், மற்ற மாநிலங்களைக்காட்டிலும் தமிடிநநாட்டில் தான் இறப்பு சத வீதம் மிகக் குறைவாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து குணப்படுத்துவது தான் அரசினுடைய முதல் கடமை. அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எங்களுடைய அரசு செய்திருக்கின்றது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகளை நாம் செய்து கொடுத்திருக்கிறோம். சேலம் மாவட்டத்தில் மட்டும் 2000 பேர் சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு படுக்கை வசதிகள் செய்து வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக சுமார் 5,000 படுக்கைகள் ஏற்பாடு செய்வதற்கு தயார் நிலையில் இருக்கிறது.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறோம்.

இந்தியாவிலேயே, அதிகமாக, தமிடிநநாட்டில் தான் 3,384 வென்டிலேட்டர்கள் இருக்கின்றது. மேலும், போதுமான அளவிற்கு செவிலியர்கள், மருத்துவர்களை நியமித்திருக்கிறோம். மருத்துவப் பணிகள் செடீநுயத் தேவையான மருத்துவம் சார்ந்த பணியாளர்களை புதிதாக நியமித்து இருக்கிறோம்.

கேள்வி: இதனை சமூகப் பரவலாக கருதலாமா?

பதில்: சமூகப் பரவல் என்றால் அனைவருக்கும் தொற்று ஏற்படுவது. அப்படி சமூகப் பரவல் ஏற்பட்டிருந்தால் நாம் அனைவரும் இங்கு ஒன்றாக இருக்க முடியாது, எனவே சமூகப் பரவல் கிடையாது. தொற்று ஏற்பட்டவர்களை பரிசோதனை செய்ததன் அடிப்படையில் தான் இவ்வளவு நபர்களைக் கண்டறிந்திருக்கிறோம்.

சென்னை மாநகரம், மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரம், குறுகலான, சிறிய தெருக்களைக் கொண்டது, அங்கு 3 அடி சந்தில் 30 வீடுகள் உள்ளன. அப்பொழுது ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி விடும். இந்தத் தொற்று எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. இது ஒரு புதிய வைரஸ் நோய், இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூடீநுமைப் பணியாளர்கள் தங்களை இந்தப் பணியில் அர்ப்பணித்து, இரவு, பகல் பாராமல், தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், சிறப்பாக, திறமையாக செயல்பட்டதன் காரணமாகத் தான் இதுவரை 19,333 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

இதற்கு மருந்து கண்டு பிடிக்காத சூழ்நிலையில், தங்களுடைய அனுபவத்தைக் கொண்டு, மக்கள் மனநிறைவு அடைகின்ற அளவிற்கு செயல்படும் நம்முடைய மருத்துவப் பணியாளர்களின் சேவை மகத்தானது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள், உள்ளாட்சித் துறை, வருவாடீநுத் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் பணியாற்றிய காரணத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நோய்ப் பரவலை கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்.

சேலம் மாவட்டத்திலும் கட்டுப்பாட்டில் உள்ளது.  வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களில் இருந்து, வெளியூர்களிலிருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்பொழுது அவர் களுக்குத் தான் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதே தவிர, சேலம் மாவட்டத்தில் அதிகமான தொற்று இல்லை. அதுபோல், பல மாவட்டங்களில் கிடையாது.

கேள்வி: மேற்கொண்டு தளர்வு ஏதுமளிக்க வாய்ப்பிருக்கிறதா?

பதில்: ஏற்கனவே தேவையான தளர்வு கொடுத்துவிட்டோம்.

கேள்வி: மண்டலம் பிரிக்கப்பட்டதனால் சேலத்திலிருந்து கோயம்புத்தூர் செல்வதுபோல் தருமபுரிக்கு செல்ல இ-பாஸ் கிடைப்பது அரிதாக உள்ளதே?

பதில்: கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்குத் தான் இந்த ஊரடங்கே உள்ளது. கட்டுப்பாடில்லாமல் போனால் தொற்று மேலும் வேகமாகப் பரவி விடும். பெங்களூரிலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக சேலம் வருகிறார்கள். அவர்களை அனுமதித்தால் இது சமூகத் தொற்றாக மாறி விடும். அதனால் தான் அங்கே பரிசோதனை செய்து அடுத்த மாவட்டத்திற்கு அனுமதிக்கின்றார்கள்.  இவ்வாறு மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, ஆங்காங்கே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுத் தான் அந்தந்த மாவட்டங்களில் அனுமதிக்கின்றனர்.

மருத்துவ நிபுணர்கள், மருத்துவத் துறைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்த கருத்துக்ளின் அடிப்படையில் தான் நாங்கள் முடிவெடுத்துச் செய்கிறோம். ஆகவே, நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரை, நோய் அறிகுறி உள்ளவர்கள், அருகிலுள்ள மருத்துவமனையில் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, சிகிச்சை பெற்றுக் கொண்டால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

இதற்கு ஒரே மருந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்றால் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், பொருட்கள் வாங்கச் செல்வது, வங்கிகளுக்குச் செல்வது என வெளியில் எங்கு சென்றாலும் சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால்களை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்.

இவையெல்லாம் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தக் கருத்துக்கள். இதனைத் தான் ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதுமட்டுமல்லாமல், காவல் துறையும், உள்ளாட்சித் துறையும் வீதிகள்தோறும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள் இந்த வழிமுறைகளை கண்டிப்பாகக் கடைபிடித்தால் தான் இந்த வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும்.

அருள்கூர்ந்து பொதுமக்கள் அரசு கூறுகின்ற வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.