சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ’சிறுத்தை’ சிவா இயக்குகிறார். குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இப்படத்தையடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் உள்ளது. அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். ஏற்கனவே ரஜினியை சந்தித்து அவர் கதை கூறி உள்ளார். அதில் சில மாற்றங்களை ரஜினி சொல்ல அதற்கேற்ப ஸ்கிரிப்ட் அமைத்து வருகிறார். ’


கொரோனா ஊரடங்கால் ரஜினி நடிக்கும் ’அண்ணாத்த’ படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. அதன் படப்பிடிப்பு தொடங்கி பின்னர் டப்பிங் வேலைகள் உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் தொடங்க இன்னும் தாமதமாகும் சூழல் உள்ளது. எனவே ரஜினி படத் திற்கு முன்பாக வேறொரு படத்தை இயக்க திட்ட மிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
ஏற்கனவே கார்த்தி நடித்த ’கைதி’ படத்தை இயக்கிய லோகேஷ் அப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கவும் உள்ளார். அதற்காக கார்த்தியிடம் கால்ஷீட் கேட்டபோது அவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் அதிலிருந்து தற்போதைக்கு லோகேஷுக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாமல் உள்ளார் . எனவே தெலுங்கு படமொன்றை இயக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் லோகேஷ். பெரிய பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. அதற்கான அற்விப்பு விரவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.