லண்டன்: உலகக்கோப்பையில் இங்கிலாந்திடம், இந்தியா தோற்றது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சிக்கந்தர் பக்த் கருத்தை வன்மையாக மறுத்துள்ளார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.
பென்ஸ்டோக்ஸ் தான் வெளியிட்டுள்ள புத்தகத்தில், 2019 உலகக்கோப்பை போட்டிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் குறித்தும், அதில் இந்திய அணியின் சேஸிங் குறித்தும் பேசியுள்ளார்.
எனவே, அவரின் கருத்துக்களை குறிப்பிட்டு பேசியுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சிக்கந்தர் பக்த், உலகக்கோப்ப‍ை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றவே, இந்தியா, இங்கிலாந்திடம் வேண்டுமென்றே தோற்றது என்ற கருத்தை, பென் ஸ்டோக்ஸின் புத்தகம் உறுதிசெய்துள்ளது என்றுள்ளார்.
ஆனால், இதை வன்மையாக மறுத்துள்ள பென்ஸ்டோக்ஸ், வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன என்றுள்ளார்.
2019 உலகக்கோப்பை லீக் போட்டியில், இந்திய அணி, இங்கிலாந்திடம், பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டுமென்ற நோக்கத்தில், திட்டமிட்டே தோற்றது என்ற குற்றச்சாட்டை சில பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.