இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வைரஸ் பரவும் வேகமும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களும் தப்பவில்லை.
இந்நிலையில் பெங்காலி மொழி நடிகை கோயல் மாலிக் என்பவருக்கும் தற்போது கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மட்டுமின்றி அவரது கணவர் தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ள கோயில் மாலிக் அவர்கள் தற்போது தனிமை படுத்தி கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். கோயல் மாலிக்கின் தந்தை பழம்பெரும் நடிகர் ரஞ்சித் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தற்போது 75 வயது ஆகிறது. கோயல் மாலிக்கின் தாய் தீபா மாலிக்கிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது டெஸ்டில் உறுதியாகியுள்ளது.