டெல்லி: நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வரும் 8ம் தேதி வங்கி ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொழிலாளர் சட்டச் சீர்திருத்தத்தை மத்திய அரசு கைவிட்டதை கண்டித்து, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. வரும் 8ம் தேதி இந்த போராட்டம் நடக்கிறது.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் என பெரும்பாலோனோர் கலந்து கொள்கின்றனர். போராட்டம் காரணமாக அன்றைய தினம் வங்கிப்பணிகள் பாதிக்கப்படும், ஏடிஎம்கள் செயல்படாது என்று எஸ்பிஐ அறிவித்துவிட்டது.

பரோடா, இந்தியன் வங்கி உள்ளிட்ட மற்ற வங்கி நிறுவனங்களும் இதேபோல பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளன. இணையதள பணிப்பரிமாற்ற வசதி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, அதற்கான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பெரும்பாலான வங்கி நிறுவனங்கள் கூறி இருக்கின்றன.