பாரதிராஜா- இளையராஜா மீண்டும் இணையும்  புதிய படம் ‘’ஆத்தா’’

’பதினாறு வயதினிலே’’ படம் மூலம் பாரதிராஜாவும், இளையராஜாவும் தமிழ் சினிமாவில் புதிய பிரளயத்தை ஏற்படுத்தினர்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் சேர்ந்து பணியாற்றவில்லை.

‘’ஆத்தா’ என்ற புதிய படத்தில் பாரதிராஜாவும், இளையராஜாவும் மீண்டும் இணைய உள்ளனர்.

இந்த படத்தின் கதையை எழுதியுள்ள பாரதி கிருஷ்ணகுமார் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

‘’ஆத்தா’ கிராமத்துக் கதை. இந்த படத்தை இயக்க பாரதிராஜா தான் பொருத்தமான டைரக்டர். கதை முடிவானதும் இளையராஜாவுடன், பாரதிராஜா பேசினார். அவரும் ’ஆத்தா’  படத்துக்கு இசை அமைக்க ஒப்புக்கொண்டார்.’ என்று தெரிவித்துள்ளார், கிருஷ்ணகுமார்.

இந்த தகவலைத் தயாரிப்பாளரும், இயக்குநருமான ’சித்ரா’ லட்சுமணன் உறுதி செய்துள்ளார்.

‘’உண்மை தான். இருவரும் மீண்டும் இணைகிறார்கள். திரைக்கதை குறித்து இளையராஜாவுடன் விவாதிக்க பாரதிராஜா விரும்பினார். ஆனால் கொரோனா முடிவுக்கு வந்ததும் விவாதிக்கலாம்’’ என இளையராஜா தெரிவித்துள்ளார்’’ என சித்ரா லட்சுமணன், தனது ‘யூ டியூப்’ சேனலில் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆத்தா ‘ படத்தின் நடிகர்-நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

-பா.பாரதி.