டிகர் சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று’ படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். அதற்கு தியேட்டர் அதிபர்கள், டைரக்டர் ஹரி உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களிடம் இயக்குனர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடப்பு சங்க தலைவர் பாரதிராஜா எதிர் கேள்வி எழுப்பு உள்ளார். ’சிறு பட்ஜெட் படங் களை தியேட்டரில் ரிலீஸ் செய்வீர்களா?’ என கேட்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: வணக்கம் திரைத்துறையினருக்கு..
ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர் களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கி றார்கள். ஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது அதில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிடத் தேவையில்லை. மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் குற்றம் சாற்றிக்கொண்டு தியேட் டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்தது தான் மிச்சம். எல்லாவற்றிக்கும் நாம் தான் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படு வது தயாரிப்பாளர்கள்தான். பாதிக்கப் பட்ட தயாரிப்பளர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் OTT. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது. வேண்டாம் என்றாலும் காலப் போக்கில் மும் அந்த இடத்துக்குத் தள்ளப்படு ம். இதற்கு நாம் கடந்த காலங்களில்
வீடியோ திருட்டு (வீடியாயோ பைரசி) க்கு எதிரான போராட்டம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதிரான போராட்டம், கேபிள்Tvக்கு எதிரான போராட்டம், DTH க்கு எதிரான
போராட்டம். சொல்லிக் கொண்டே போகாலம். இறுதியில் எல்லாவற்றையும் பின்வாசல் வழியே நாம் வரவேற்றுக் கொண்டதே நிதர்சனம்.என் பார்வையில் தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சினை தியேட் டரில் டிக்கெட்விலையைவிட பாபாப் கார்ன் , பார்க்கிங் விலை அதிகம். ஒருசாமானிய மனிதன் எப்படிஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து குடும்பத்தோடு தியேட்டருக்கு வர முடியும்.? அதனால்தான் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதள அயோக்கியர்களை நோக்கி மக்கள் ஆர்வம்காட்டுகிறார்கள் நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
கொரனாகாலக் கட்டத்தில் தயாரிப் பாளர்கள், நடிகர்கள் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பெப்சி தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருமே ஐந்து மாதமாக வேலையின்றி எவ்வளவு பொருளாதர நெருக்கடிக்கு ஆளாகியுள் ளோம் என்பதை அனைவரும்அறிவோம் இப்பொழுதுதான் மத்திய அரசு படப் பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்கள், தியேட்டரை திறக்க தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம் அவர் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்துவிட்டு விரைவில் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறக்க அனுமதி அளிப்பார் கள் என்று நம்புகிறோம். ஆனால் அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்நோக்க இருக்கும் சில பிரச்சினைகளை பேசி தீர்ப்பது நன்றாக இருக்கும் என கருது கிறேன். குறிப்பாக, மக்கள் நலனில் அக்கறைகொண்டு தியேட்டரில் 35சதவி கிதம் முதல் 50 சதவீதக்குள் சமூக இடை வெளியுடன் தியேட்டரில் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் என அறிகிறோம், 50 சதவீதம் மக்களைஅனுமதித்தால்கூட ஒரு திரைப்ப டம் தியேட்டரில் எத்தனைவாரங்கள் திரையிடப்படும் ? ஏற்கனேவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப் பதில்லை, அப்படியே தியேட்டர் கிடைத்தாலும் முதல் இரண்டு வாரத்திலே தூக்கிவிடுவார்கள் அதே நிலையில் இன்றைய சூழ்நிலையில் படங்கள் வெளி யிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடித்துப்போவார்கள் குறைந்தது ஒருதிரைப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் தியேட்டரில் திரையிடப்பட வேண்டும். பிறகு தயாரிப்பாளர், திரை அரங்க உரிமையாளருக்கும் டிக்கெட் விலையில் உள்ள சதவீதம் இன்றைய சூழ்நிலையில் மாற்றி அமைக்கப் படவேண்டும்.


தயாரிப்பாளர்களின் எங்களது நீண்டநாள் கோரிக்கையான VPF (virtual print fee) தொகை திரைப்படம் வெளியிடும் சமயத்தில் பெரும் சுமையாக இருக்கிறது. இதை vpf சேவை வழங்கும் நிறுவனங் களும், தியேட்டர் உரிமையாளர்களும் பேசித் தீர்த்துகொண்டு எங்களுக்கான சுமையை கருத்தில் கொண்டு முன்வர வேண்டும். தயாரிப்பாளர்களின் மற்றொரு கோரிக்கையான டிக்கெட் விற்பனையை தயாரிப்புளார்கள் அறிந்து கொள்ளும் வகையில் தியேட்டர் டிக்கெட் விற்பனையை இணைய தளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும். எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வராமல் பல திரைப்படங்கள் முடக்கப்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட திரைப் படங்கள் திரைக்கு வந்தால்தான் அடுத்தடுத்து அந்த தயாரிப் பாளர் படம் எடுக்க முடியும்என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெரு வார்கள், நாமும் நன்றாக இருப்போம் ஆகையால் , தமிழ்திரைத்துறை நலிந்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும் , உடனடியாக தீர்க்கப்படவேண்டும் தயாரிப்பாளர்களை வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே சரியாக இருக்கும். சிறப்பாக இருக்கும்.
பிரச்சினைகள் இப்படி இருக்க அதை விடுத்து , பிரச்சினையை வேறுபக்கம் திருப்புவது சரியாக தோன்றவில்லை. சமீபநாட்களில் OTT க்கு எதிரானப் பிரச்சினையை சூர்யா, அவருக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக் குரிய விஷயமாகும்.இதற்கு பின்னணி யில் உள்ள அரசியலை நானும் அறிவேன் நீங்களும் அறிவீர்கள். திரைப் படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒருசிலரே அதில் சூர்யாவும் குறிப்பிடத் தகுந்தவர். தசூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் OTT யில் வரக்கூடாது, திரையில்தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்க கூடிய ஒன்றுதான், அதேநேரத் தில் சிறிய பட்ஜெட்டில்எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் கொண்டுவர முன்வருவீர் களா? போராடுவீர்களா? படைப்பு களிலும், தயாரிப்புகளிலும் தொழில் சுதந்திரம் வேண்டும்.கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது.
என் நண்பர் சிவக்குமார் அவர்களின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். சூர்யா, கார்த்தி இருவரும் என் வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள் அவர்களின் மனித நேயப் பண்பும், நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன்.இவர்கள் தமிழ் திரைக்கு
கிடைத்தபொக்கிஷங்கள்.இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள்.பெருமைப்படுங் கள். இவர்களை மட்டுமில்லை எந்தவொரு கலைஞனையும் காயப் படுத்தாதீர்கள். மனம்வலிக்கிறது.
இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம் தயாரிப்பாளர்கள் நல்லநிலையில் இருந்தால்தான், இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோ கஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.
கொரனாவால்பெரிதும் பாதிக்கப்பட் டுள்ள தமிழ்ரசிகர்கள் சமூக இடைவெளி யுடன் திரைப்படத்தைக் காண OTT சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ண தில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும். ஜிவி.பிரகாஷ் குமார் இசை அமைத்து சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா மிரட்டியுள்ள சூரரைபோற்று திரைமுன்னோட்டம் பார்த்துவியந்தேன்.. இந்த திரைப்படம் தமிழ் திரைப்படவரலாற்றில் சூரரைப் போற்று முத்திரை பதிக்கும் தமிழனைப் போற்றும்.. வாழ்த்துக்கள்
இவ்வாறு பாரதிராஜா கூறி உள்ளார்.