இந்தியாவில் கொரோனா வைரஸின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.

இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், காவல்துறையினருக்கு திரையுலகப் பிரபலங்கள் தொடங்கி பலரும் பாராட்டுகள் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சிலர் அவர்களுக்கான முகக் கவசங்கள், கையுறைகள் வழங்கி வருகிறார்கள்.

தற்போது பாரதிராஜாவும் அவர்களுக்கு உதவிகள் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸின் அசாதாரண நெருக்கடியையும் பொருட்படுத்தாது, இந்தக் கொடிய நோயின் பரவலைத் திறம்படக் கட்டுப்படுத்த நமது தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியவை. நன்றியுணர்வின் ஒரு சிறிய அடையாளமாக காவல்துறையினர், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கியுள்ளேன்” என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]