கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.facebook.com/100011631339980/videos/1081562085574826/

என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய பாலு, டேய் பாலு.. எஸ்.பி.பாலு எழுந்து வாடா. வாடா என்ற இந்த உரிமையை நீ எனக்கும், நான் உனக்கும் கொடுத்து 50 ஆண்டு காலமாகிறது. பள்ளி நாட்களில் கூட என் நண்பர்களோடு இந்த அளவுக்கு பழகியதில்லை என கூறி பல மனப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்துள்ளார் .