40 வயதான போஜ்புரி நடிகை அனுபமா பதக், மும்பையில் தனது இல்லத்தில் பணப்பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆகஸ்ட் 2-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தான் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்பு, ஃபேஸ்புக்கில் நேரலையில் பேசியுள்ளார் அனுபமா.

உங்கள் பிரச்சினைகளை யாரிடமும் பகிராதீர்கள், யாரையும் நண்பராக நினைக்காதீர்கள். இதை நான் என் வாழ்க்கையில் கற்றுக் கொண்டிருக்கிறேன். மக்கள் மிக சுயநலமானவர்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்” என்று பேசியுள்ளார்.

அனுபமாவின் கடைசி கடிதத்தில், தனது இந்த முடிவுக்குப் பணப் பிரச்சினைகள் ஒரு முக்கியக் காரணம் என்றும், மனிஷ் ஜா என்பவர் மே மாதம் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும், திருப்பித் தர மறுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அனுபமாவின் கடைசி ஃபேஸ்புக் பதிவு இரவு 12 மணிக்குப் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், “Bye bye and Good night” என்று அனுபமா குறிப்பிட்டுள்ளார்.