சென்னை: காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.

கடந்த உலகக்கோப்பைத் தொடரின்போதே புவனேஷ்வருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இடையிடையே ஓய்வெடுத்து வந்தார். மேலும், உள்நாட்டில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், மேற்கிந்திய அணிக்கெதிரான டி-20 தொடரில் பங்கேற்றாலும், அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. இந்நிலையில், அவருக்கு மீண்டும் தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.

எனவே, அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் தொடரிலிருந்து புவனேஷ்வர்குமார் விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்படுவார் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.