னடா

பிக்பாஸ் நிகழ்வில் கலந்து பல ரசிகர்களைப் பெற்ற லாஸ்லியாவின் தந்தை மரணம் அடைந்துள்ளார்.

சென்ற பிக் பாஸ் சீசனில் கலந்துக் கொண்ட லாஸ்லியா இந்நிகழ்வின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.  அத்துடன் இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட நடிகர் கவின் உடன் அவர் காட்டிய நெருக்கம் பலராலும் பேசப்பட்டது.  நிகழ்வின் இடையில் லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக் பாஸ் இல்லத்துக்கு வந்தனர்.

கனடாவில் வசித்து வரும் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் அப்போது லாஸ்லியாவை மிகவும் கண்டித்தார்.   அதன் பிறகு சமாதானம் ஆனார்.   பிக்பாஸ் நிகழ்வுக்குப் பிறகு லாஸ்லியா மற்றும் கவின் குறித்த செய்திகள் அதிகம் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் கனடாவில் வசித்து வரும் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணம் அடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.  இதனால் லாஸ்லியாவின் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்