தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. பலரின் கனவு கண்ணியும் ஆவார்.

பொதுவாக பெட்டிகளை அவர் தவிர்த்து வருபவர் . சமீபத்தில் பிரபல ஆங்கில இதழான ‘வோக்‘ இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில், வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த நயன்தாரா ’தனது கேரியரில் செய்த மிகப் பெரிய தவறு சூர்யாவின் கஜினியில் நடித்ததுதான். அசினுக்கு நிகரான வேடம் என்று சொல்லி தான் கதை சொன்னார்கள் ,ஆனால், படத்தில் எனது கேரக்டரை வேறுவிதமாக பயன்படுத்திவிட்டார்கள் .அதற்கு பிறகுதான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினேன்’. என கூறியுள்ளார்.