விஜய் டிவியில் 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’ . 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

2017-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30-ம் தேதி முடிவடைந்தது. இதில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ‘பிக் பாஸ் 2’, கடந்த வருடம் (2018) ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. கடந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க,16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.இதில், வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் ஐஸ்வர்யாவு தத்தாவுக்குக் கிடைத்தது.

இந்நிலையில், மூன்றாவது சீஸனுக்குத் தயாராகி விட்டது ‘பிக் பாஸ்’ டீம். இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. கமலை வைத்து போட்டோஷூட், ப்ரமோ வீடியோக்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.