நாகர்கோவில்,

லாச்சாரத்திற்கு எதிரானJ  பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறி உள்ளார்.

தனியார் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒருபுறம் எதிர்ப்புகள் எழுந்தாலும், அதை பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரிக்கு சென்றுள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரான பிக் பாஸ் நிகழ்ச்சியை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுத்த வேண்டும் என கூறினார்.

மேலும், மணல் கொள்ளை பிரச்சினையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு உள்ளது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், கன்னியாகுமாரி மாவட்டத்தில் அமைய இருக்கும்,  இணையம் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் தொடர்பாக மீனவ மக்களுடன் விவாதிக்க தயார் எனவும்,  இத்திட்டத்தின் பெயரால் பொதுமக்களை எவரும் குழப்ப வேண்டாம் எனவும் அவர் கூறினார்.