பிக் பாஸ் சீசன் 4 இறுதி வாரத்தில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்வாகி இருந்தார்கள். ஆனால் அதில் இருந்து கேப்ரியல்லா 5 லட்சம் பணத்துடன் வெளியேறிவிட்டார். அதனால் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று கிராண்ட் ஃபினாலே மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பு தொடங்க இருக்கிறது. வந்திருக்கும் தகவல்களின்படி ஆரி தான் அதிக வாக்குகள் பெற்று டைட்டில் ஜெயித்துள்ளார். அதை கமல்ஹாசன் இன்று முறைப்படி அறிவிக்க இருக்கிறார். மேலும் இரண்டாவது இடம் பாலாஜி முருகதாஸுக்கு கிடைத்திருக்கிறது.

ரியோவுக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. நான்காவது இடம் ரம்யாவுக்கும் கடைசி இடம் சோம் சேகருக்கும் கிடைத்திருக்கிறது.