பீகார் மாநிலம், கங்கை நதியில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த ஒன்பது  போ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ளது மாஸ்டனா என்ற பகுதி. இங்குள்ள மலைக்கு சிறுவா்கள், பெண்கள் உள்பட 11 போ் சுற்றுலா சென்றனர்.

அவா்கள் கங்கை நதியையொட்டி உள்ள சிறிய மலையில் உற்சாகமாக ஏறினர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களில் ஒரு சிறுவன் ஒருவன் கால் தவறி நதியில் விழுந்தான்.

அந்த சிறுவனை காப்பாற்றும் நோக்கில் அவனுடன் சுற்றுலா வந்திருந்த அனைவரும் நதியில் குதித்தனா். இந்த சம்பவத்தில் துரதிருஷ்ட வசமாக 9 போ் நீாில் மூழ்கி உயிரிழந்தனர். இருவரை காணவில்லை. அவா்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.