பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் 3கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதுரு. ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் 71 தொகுதிகளில்  கடந்த 28ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அன்றைய தினம்  54 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில்  இன்று  2வது கட்ட வாக்குப்பதிவு  நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  இன்றைய வாக்குப்பதிவு  7 மாவட்டங்களில் உள்ள 94 சட்டமன்ற தொகுதிகளில்  நடைபெறுகிறது.

இந்த 94 தொகுதிகளில்  1463 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் சுமார் 10 சோதவீதம் பேர் அதாவது 146 பேர் பெண்கள்.

இன்று வாக்குப்பதிவ செய்யும் தொகுதிகளில்  மொத்தம் 2.85 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்ய உள்ளனர்.   அவர்கள் 1.35 கோடி பெண் வாக்காளர்கள். ன்றைய வாக்குப்பதிவுக்காக 41,362 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ளது.

பீகார் 2ம் கட்ட தேர்தலுடன், 11 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் தொடங்கியது. மபியில் 28 தொகுதிக்கும், குஜராத்தில் 8, உபியில் 7, ஒடிசா, நாகலாந்து, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலா 2, சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் அரியானாவில் தலா 1 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.