பாட்னா: பீகாரில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தொடக்கத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தால் பீகாரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தள்ளிப்போனது.

இந் நிலையில் வரும் 8ம் தேதி முதல் மாநிலத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஜனவரி 4ம் தேதி முதல் 10 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.