சுயசரிதை ஹீரோ வாழ்வே சுயசரிதை சினிமாவாகிறது….

இந்தி சினிமா உலகம் முன்னொரு காலத்தில் நிழலுலக தாதாக்கள் பிடியில் இருந்ததாக கூறப்படுவதுண்டு.

அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டதால், அண்மைக்காலமாக உச்ச நடிகர்கள் இந்தி சினிமாவை ஆட்டி படைப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்த நடிகர்கள் ஆதிக்கத்தால் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து கொண்டதாகப் பகிரங்கமாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தற்கொலை செய்த சுஷாந்தின் வாழ்க்கையைப் படமாக்கப்போவதாக அறிவித்துள்ளார், இந்தி தயாரிப்பாளர் விஜய் சேகர் குப்தா.

இந்த படத்துக்கு ‘’SUICIDE OR MURDER ?’’ பெயர் சூட்டி விளம்பர போஸ்டரையும் ரெடி செய்துள்ளார், சேகர் குப்தா.

’’இந்த படம், இந்தி சினிமாவில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும்’’ என்று ஆவேசமாக சொல்கிறார், குப்தா.

இந்த படத்தை சாமிக் மாலிக் டைரக்ட் செய்கிறார்.

-பா.பாரதி