டில்லி,

பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் நாளை டில்லியில் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்திற்கு பாரதியஜனதா கட்சி தலைவர் அமித்ஷா  ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்துவார் என கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டில்லியில் பாரதியஜனதா பொதுச்யெலாளர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது,

நாளை நடைபெற இருக்கும் பா.ஜ.க மாநில முதல்வர்கள்  கூட்டத்தில் 13 மாநிலங்களின் முதல்வர்கள், 5 துணை முதலமைச்சர்கள் உள்பட  மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதாகவும்,

கட்சி தலைவர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறினார்.

மேலும், பாஜக ஆளும் மாநிலங்களின் வளர்ச்சி, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவற்றை தொய்வில்லாமல் நடைமுறைப்படுத்தவும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று கூறினார்.

நாளை டில்லியில் நிதிஆயோக் கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.