சென்னை:

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மெரினாவில் பாஜக தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கூட்டிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான கூட்டத்தில் கலந்துகொண்ட இலக்கியப் பேச்சாளர்  நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சோலியை முடித்துவிடுவார்கள் என்று நினைத்தேன், இன்னமும் முடிக்கவில்லையே ஏன் இஸ்லாமியர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அவரது பேச்சு வைரலான நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெல்லை மாவட்ட பாஜகவினர் காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில், அவருக்கு எதிரான போராட்டங்களை யும் நடத்தினர்.

இதற்கிடையில் நெல்லைக்கண்ணன் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

இந்த நிலையில், நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரை யில் பாஜக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று மெரினாவில்  பாஜக தலை வர்கள் இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பல தலைவர்கள் கலந்துகொண்ட போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்டவர் களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.