“நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார்” என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோரை சந்தித்து அரசியல் குறித்து ஆலோசித்தார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத், “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருகிறார். தனிக்கட்சி துவங்கி அரசியலுக்கு வருவார்.  ரஜினியை பாஜக இயக்கவில்லை” என்றார்.

மேலும், “ரஜினி முழுமையான தமிழர். அவர் தமிழகத்தின் நலனை பிரதிபலிப்பவராகத்தான் இருக்கிறார்.இருப்பார். அவரைப் பிரித்துப் பேசுவது தவறு” என்றும் தெரிவித்தார்.