மதுரை:

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் மோடி அறிவிப்பார் என்று பாஜக மேலிட செயலாளர்   முரளிதர ராவ் கூறி உள்ளார்.

தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி உருவாகும் என்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா, அத்வாலே போன்றவர்கள் தெரிவித்துள்ள நிலையில், முரளிதரராவும், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அறிவிப்பை பிரதமர் மோடி முறையாக அறிவிப்பார் என்று தெரிவித்து உள்ளார்.

மதுரையில் அமைய்ய எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அன்ற இரவு மதுரையில் பா.ஜ.க. மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.

பாஜக மாநாடு நடைபெறும் இடத்தை இன்று  பார்வையிட்ட மத்தியஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய முரளிதரராவ்,  வருகிற 27-ந் தேதி நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தென் மாவட்டங்களில் இருந்து குறிப்பாக 10 பாராளுமன்ற தொகுதிகளில் இருந்து 2 லட்சம் தொண்டர்கள், மோடியை வரவேற்க தயாராக உள்ளனர் என்று கூறினார்.

அரசியல், கலை, பண்பாடு கொன்ற  மதுரை நகரம் இந்தியாவின்  முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். இங்கு பிரதமரின் முதல் கூட்டம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது. கடந்த  2014ம் ஆண்டு முதலே மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றவர்,  தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் 4 வழிச்சாலை, கப்பல் போக்குவரத்து துறை, மருத்துவ காப்பீடு, பாதுகாப்பு துறை தளவாட உற்பத்தி ஆகிய துறைகளில் பெரும் சாதனை புரிந்துள்ளதாக தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மட்டுமே முடிவு செய்வார்கள். அது பற்றி நாங்கள் கூற முடியாது.

தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி என்று பலர் கருத்து கூறுகின்றனர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்தான் கூட்டணி அறிவிப்பு வரும். அதனை பிரதமர் மோடி முறையாக அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்