மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் இடைத்தேர்தலில் தொகுதியில் பாஜக வென்றது. பந்தாரா கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

பால்கர் தொகுதியில் பாஜக வெற்றிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களே காரணம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார். இந்நிலையில், சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பாஜக-சிவசேனா கூட்டணிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. இன்னும் சிவசேனாவுடன் கூட்டணி தொடர்வதாக நம்பிக்கை கொண்டுள்ளோம். சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது’’ என்றார்.