காட்சிரோலி, மகாராஷ்டிரா

தினெட்டு வயதுக்குட்பட்ட பெண் ஒருத்தியை கல்யாண ஆசை காட்டி பலாத்காரம் செய்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காட்சிரோலி மாவட்டத்தில் சிரொஞ்சா தேசில் தாலுக்காவின் பாஜக தலைவராக உள்ளவர் அஜய் என்கண்டி.    இவர் ஒரு மணல் ஒப்பந்ததாரர் ஆவார்.   மகாராஷ்டிராவின் பழங்குடியினர் முன்னேற்றத்துறை அமைச்சர் ராஜே அம்ப்ரிஷ்ராவ் ஆத்ராமுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.   இவருடைய தாயார் காட்சிரோலியில் ஒரு பெண்கள் விடுதி நடத்தி வருகிறார்.

அதே மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கு அவளுடைய பெற்றோர்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர்.   புகுந்த விட்டில் அந்த சிறுமியை கொடுமை செய்யவே அவள் வீட்டை விட்டு ஓடி வந்து தாய் தந்தையிடம்  தஞ்சம் புகுந்துள்ளாள்.   பெற்றோர் ஏற்க மறுத்ததால் அவளை காவல் துறையினர் அஜய்யின் தாய் நடத்தி வந்த விடுதியில் அனுமதித்துள்ளனர்.    அங்கு அவளுடன் நண்பரான அஜய் அவளை திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை காட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அங்கிருந்து தப்பிச் செல்ல பல முறை முயன்றும் அந்தப் பெண் மீண்டும் பிடிபட்டு விடுதியில் அடைக்கப்பட்டுள்ளார்.   இறுதியில் அந்தப் பெண் அங்கிருந்து தப்பி காட்சிரொலியில் உள்ள குழந்தகள் நல வாரிய தலைவரை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி உள்ளாள்.   பிறகு வாரிய தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது அஜய் கைது செயப்பட்டுள்ளார்.   தற்போது விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.