திரிபுரா மாநிலத்தில் உள்ள இரு தொகுதிகளிலும், தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 100 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் பகல் 1 மணி நிலவரப்படி,

தேசிய ஜனநாயக கூட்டணி: 02 தொகுதிகள்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி: 00 தொகுதிகள்

இதர: 00 தொகுதிகள்

இவ்வாறு முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த திரிபுரா மாநிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக தன்வசப்படுத்திய நிலையில், தற்போது 2 நாடாளுமன்ற தொகுதியிலும் பெரிய அளவிலான முன்னிலை பெற்றிருப்பது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.