போபால்:

நாதுரான் கோட்ஸே தேசபக்தர் தான் என்று மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.

மூலம் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கமல்ஹாசன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, நாதுரான் கோட்ஸே தேசபக்தர் என பிரக்யா தாக்கூர் கூறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவும், அக்கட்சியன் முக்கிய தலைவருமான உஷா தாக்கூரும் கோட்ஸே தேச பக்தர் என்று கூறியிருக்கிறார்.

நவராத்திரி காலத்தில் கார்பா நிகழ்ச்சியை முஸ்லிம்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் ஏற்கெனவே இவர் கூறியது பெரும் சர்ச்சையே ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

காந்தியை கொல்ல கோட்ஸே முடிவு செய்ததற்கு அப்போதைய சூழல் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறிய அவர், நாதுரான் கோட்ஸே தேச பக்தியாளர் தான் என்று கூறியுள்ளார்.