லக்னோ:

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கை கைது செய்துள்ளனர். இளம்பெண்ணை எம்.எல்.ஏ. வீட்டுக்கு அழைத்துச் சென்ற சாஷி சிங் என்ற பெண்ணும் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதனால் கோபமடைந்துள்ள எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் இளம்பெண்ணின் குடும்பத்தினர், கிராம மக்களை மிரட்டியுள்ளனர். மிரட்டலை தொடர்ந்து 2 பேர் மாயமாகியுள்ளனர். எம்.எல்.ஏ.வை உன்னாவ் அழைத்துச் சென்று விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.