புதுடெல்லி: யோகியாகிய எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், உங்களை சபித்து விடுவேன் என மிரட்டியுள்ளார், சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்கு புகழ்பெற்ற பாரதீய ஜனதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மஹராஜ்.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவோ தொகுதியின் உறுப்பினராக தற்போது பதவி வகிக்கும் இவர்தான், இப்படி வாக்காளர்களை ஏடாகூடமாக மிரட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் ஒரு சந்நியாசி. உங்கள் வீட்டிற்கு ஓட்டுப் பிச்சைக் கேட்டு வந்துள்ளேன். எனவே, ஒரு சந்நியாசியின் வேண்டுகோளை நீங்கள் புறக்கணித்தால், உங்களின் மகிழ்ச்சியை நான் பறித்துவிடுவேன்.

அதனால், உங்கள் வாழ்வில் பல மோசமான பின்விளைவுகள் ஏற்படும். ஆகையால், நீங்கள் என்னை வெற்றிபெற வைக்க வேண்டும்” என்பதாக மிரட்டியுள்ளார். இவரின் இந்த பேச்சுக் குறித்து அவரின் கட்சி இன்னும் பதிலளிக்கவில்லை.

அவர்களின் பிரதமரே இதைவிட மோசமாக பேசிக்கொண்டிருக்கையில், இவரின் பேச்சுக்கெல்லாம் கட்சி என்ன பதில் சொல்ல முடியும்? என்கின்றனர் விமர்சகர்கள்.

– மதுரை மாயாண்டி