சென்னை: விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதிக்கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந் நிலையில் சாலைகளில், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி தமிழ்நாடு கைவினை காகித கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மை தயாரிப்பாளர் சங்கம் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் இதே போன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்யும் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக முறையிடப்பட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த மதுரை வழக்கறிஞர் ராமசாமி உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.