கடலூர் : நெய்வேலியில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

நெய்வேலி 2வது சுரங்கத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்துவதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட இடமான என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். முன்னதாக, வருமான வரி சோதனைக்கு பிறகு நடிகர் விஜய் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டார்.

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நேற்று முன்தினம் அழைத்துச் சென்றனர். 2 நாட்கள் விசாரணைக்கு பிறகு நடிகர் விஜய் இன்று மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

அதனால் படக்குழுவினரும், ரசிகர்களும் உற்சாகமாக காணப்பட்டனர். ஆனால் பாஜகவின் போராட்டத்தால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.