புதுடெல்லி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்பான வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து பாரதீய ஜனதா அளித்தப் புகாரைத் தொடர்ந்து, மேற்குவங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

இந்தப் படம், வருகிற மே மாதம் 3ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல்கள் நடைபெற்று முடியும்வரை, இந்தப் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டுமென, பாரதீய ஜனதா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து தேர்தல் ஆணையம் மதிப்பாய்வு செய்ய வேண்டுமெனவும் பாரதீய ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு மே மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.

– மதுரை மாயாண்டி