பெல்லாரி:

ர்நாடகாவில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பாரதியஜனதா கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் இன்று அதிகாலையில் கோ பூஜை செய்தார்.  இது பரபரப்பாக பேசப்படுகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதவி தொகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜ சார்பில் முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார்.

ஏற்கனவே சித்தராமையா எந்த தொகுதியில் நின்றாலும் அவரை தோற்கடிப்போம் என சவால் விடுத்த ஸ்ரீராமுலு இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி தனது வீட்டில் இன்று அதிகாலை பசு மாட்டை வரவழைத்து கோ பூஜை நடத்தினார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.