சென்னை: தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தாராபுரம் வருகை தரும்  பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட  100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சமூக செயற்பாட்டாளர் முகிலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இன்று தமிழகம் வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். கேரளாவில் பாலக்காடு பிரச்சாரத்தை முடித்த பின், திருப்பூர் மாவட்டம் தாராப்புரத்தில் பாஜக மாநில தலைவர் எல் முருகனை ஆதரித்து பிரச்சாரம் மதியம் பிசாரம்  மேற்கொள்ளவுள்ளார்.

இதையடுத்து,   கோவை வந்த  வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி காட்டி, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை   காவல்துறை கைது செய்தனர்.  மேலும், கோவையில் #GoBackFascistModi எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன் அறிவித்திருந்த நிலையில், அவரும் கைது  செய்யப்பட்டுள்ளார். ஈரோடு சென்னிமலையில் உள்ள இல்லத்தில் முகிலனை போலீசார் கைது செய்தனர்.