புவனேஸ்வர்,
ற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

புவனேஸ்வரில்  நேற்ற நடைற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே போட்டி நடைபெற்றது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.   இந்திய வீரர் இக்பால் ஜாபர் 2 விக்கெட்டும், கீதன் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். நியூசிலாந்துஅணியில் வில்சன் ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் குவித்தார். இதுவே நியூசிலாந்து அணியின் அதிக பட்ச ஸ்கோர்.

பின்னர் இந்திய அணி மட்டையை பிடித்து களம் இறங்கியது. 9 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்திய வீரர்கள் சுக்ராம் மஜ்ஹி 56 ரன்னுடனும், அஜய்குமார் ரெட்டி 72 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதுவரை 8 ஆட்டங்களில் ஆடிய இந்திய அணியினர் 7 வெற்றிகளை பெற்றுள்ளனர்.   இதன் காரணமாக இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொள்கிறது.