சார்ஜா:

பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடந்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 38.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்தியா தக்க வைத்தது.