நெல்லை:

புளூவேல் கேம் விளையாடிய நெல்லையை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் கையில் தீ மற்றும் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புளூவேல் கேம் விளையாடிய மதுரை கல்லூரி மாணவர் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகத்தை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த கேமில் மாணவர்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள் சிக்குவதைத் தடுக்க நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான உதவி எண்கள், ஆலோசனைக்கான வாட்ஸ் அப் நம்பர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லையில் புளூவேல் கேம் விளையாடிய மாணவன் கையில் தீ மற்றும் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவ்ம பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.