கொரோனாவினால் பாலிவுட் திரையுலகினர் பாதித்த வண்ணம் இருக்கின்றனர். பிரபல இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி. இவர் ராஜ்குமார் ரேகா நடித்த கர்மயோகி மற்றும் ராஜ்திலக் உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறார். இவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

அனிலின் சகோதரர் ராஜிவ் சூரி கூறும் போது,’அனில் சில தினங்களுக்கு முன் ஜூரத்தால் பாதிக்கப்பட்டார். மறுநாள் அவரது உடல் நிலை மோசமானது. மூச்சுவிடுவதற்கு சிரமப் பட்டார். உடனடியாக மும்பை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம். அவரை மருத்துவ மனையில் சேர்க்க மறுத்துவிட்டனர். மற்றொரு மருத்துவ மனையிலும் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதில் அவர் உடல்நிலை மேலும் மோசமாகி இறந்தார்’என்றார்.
அனில் சூரி உடல் வெர்சோவாவில் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
#