சென்னை

மீண்டும் சென்னை விமான நிலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்ற ஞாயிறு அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் ஒன்று வந்தது தெரிந்ததே.    அதையொட்டி காவல் துறையினர் விசாரணை செய்து திருச்சியை சேர்ந்த தீபு ஆனந்த் மற்றும் சென்னையை சேர்ந்த சக்தி சரவணன் ஆகிய இரு மென் பொருள் பொறியாளர்களை கைது செய்தனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலக தொலை பேசிக்கு ஒரு மர்ம அழைப்பு வந்துள்ளது.   அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் அந்த விமான நிலையம் தகர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி விமான நிலைய அதிகாரிகள் கடும் சோதனையில் ஈடு பட்டுள்ளனர்.   விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.   இந்த பாதுகாப்பு அதிகரிப்பினால்  பயணிகளிடையே கடும் பரபரப்பு உண்டாகி உள்ளது.    சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.